செங்கல்பட்டு டிச, 8
மாமல்லபுரம் மற்றும் “நீலக்கொடி” அந்தஸ்த்தை பெற்ற கோவளம் கடற் கரையை தூய்மையாக வைப்பது தொடர்பாக “தூய்மை சமூகம், தூய்மை கடல்” என்ற பெயரில் மாமல்லபுரத்தில் நேற்று பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பயிலரங்கம் இன்றுடன் முடிவடைகிறது.