Spread the love

புதுக்கோட்டை டிச, 3

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 24 விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 29ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களது 5 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 24 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீனவ சங்க நிர்வாகிகளை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கூடிய விரைவில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். எனவே வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *