கிருஷ்ணகிரி நவ, 30
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், உதவி ஆட்சியர்கள் சரண்யா, சதீஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் ஜாகீர் உசேன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், உதவி ஆணையர் குமரேசன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நில அளவை பிரிவு உதவி இயக்குனர் சேகரன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.