Spread the love

துபாய் நவ, 29

இந்தியாவில், அடுத்த ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கு தகுதி பெற, முதன்முறையாக உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் 8 இடங்களுக்கு, 13 அணிகள் விளையாடுகின்றன.

இதுவரை, போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான் என 6 அணிகள் தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில் இலங்கை சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. பல்லேகலேயில் நடந்த இரண்டாவது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனையடுத்து தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 5 புள்ளி கூடுதலாக பெற்ற ஆப்கானிஸ்தான், 115 புள்ளிகளுடன் 7வது இடத்தை கைப்பற்றியது. இதன்மூலம் உலக கோப்பை 2023 பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *