அரியலூர் நவ, 28
கொல்லாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்