Spread the love

பாலப்பள்ளம் நவ, 27

கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் வெள்ளியா விளையில் பீ.டி.ஆர் மெமோரியல் ஹாலில் வைத்து 2022 ம் ஆண்டிற்கான மாநில வுஷூ குங்ஃபூ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

இதில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சர்வதேச சட்ட திட்ட முறைப்படி தாலு சான்சு, துலியன் டெமோவில் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அளவில் கன்னியாகுமரி மாவட்ட அணியினர் முதல் இடத்தையும் காட்டக்கடை அணியினர் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சான்றிதழ் மற்றும் பரிசுகளை அளித்து பாராட்டினார். மேலும் தேசிய அளவிலான போட்டிக்கு வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் சங்கத் தலைவர் மோகன்தாஸ், பொதுசெயலாளர் சிபு ஷேக் முகமது, ஜெயச்சந்திரன் (பொறுப்பாளர்) மற்றும் மூத்த பயிற்சியாளர் பிரபு, தாஸ், ரியோ ராய், சஜின், அருண்ஷா ஆகியோர் தலைமை தாங்கி போட்டியை நடத்தினர்.

Y. சாகுல் ஹமீது.
தாலுகா நிருபர்.
குளச்சல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *