Spread the love

ஆந்திரா நவ, 27

ஆந்திராவில் புதிய சாலை பணிகளுக்கான திட்டப்பணிகள் நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று இரவு டெல்லியில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.

நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

காலை 10 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராயல சீமாவில் உள்ள திருப்பதி, நெல்லூர், அனந்தபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.9,213 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

நாயுடு பேட்டையில் இருந்து கிருஷ்ணபட்டினம் வரை ரூ.1,399 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 35 கிலோ மீடடர் 6 வழிச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார்.

இதேபோல் ரூ.28.99 கோடி மதிப்பில் மதனப்பள்ளி, பீலேரு, திருப்பதி இடையிலான 4 வழி சாலையும், கொத்தூர் கோரண்ட்ல இடையே ரூ.840 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உள்ளிட்ட பல்வேறு சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *