Spread the love

புதுக்கோட்டை நவ, 22

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடையாள அட்டை, யுபிஐ கார்டு பெறுவதற்கான மனுக்களும் பதிவு செய்யப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் சிவக்குமார், கோமதி, மலையாண்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *