திருவள்ளூர் நவ, 5
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம் மற்றும் விவசாயிகள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.