Spread the love

செங்கல்பட்டு நவ, 3

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் காவல் தலைமை இயக்குனர் ரவி கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதி மாவட்டங்களில் கனமழை பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மீட்பு கருவிகளை இயக்கி சோதனை செய்தார். மழை வெள்ளத்தில் சிக்குவோருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சைகள், மேலும் அவர்களை மீட்கும் பணிகள் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *