செங்கல்பட்டு அக், 31
சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் ராஜேந்திர சிங் தலைமையில் குழுவினரும், கமாண்டன்ட் அருண் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினரும் நேற்று வந்தனர்.
இந்த குழுவினருடன் மூத்த ஆலோசகர் கோஷ், செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், உதவி ஆட்சியர் ஷஜீவனா, இணை இயக்குனர் பிரியா ராஜ் ஆகியோரும் வந்தனர்.
அங்கு அவசரகால தயார்நிலைத்திட்டத்தை ஆய்வு செய்தனர். ஒருங்கிணைந்த கதிர்வீச்சு கண்காணிப்பு வசதி, கட்டுப்பாட்டு அறை, டர்பைன் உருவாக்கும் வசதி, புகுஷிமாவுக்குப் பின் அமைக்கப்பட்ட ஹூக்-அப் புள்ளிகள் மற்றும் மின்நிலையத்தில் உள்ள மற்ற அணுசக்தி வசதிகளை பார்வையிட்டனர்