கிருஷ்ணகிரி அக், 26
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்ட ப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட நான்கு கல் தூண்கள், முன்னாள் தலைவர் ராஜா மற்றும் கிராமத்தினர் உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த நான்கு தூண்களில் இரண்டு ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.