Spread the love

திருச்சி அக், 21

விவசாய கூலி வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அரியாறு-கோரையாறு-உய்யகொண்டான்-குடமுருட்டி ஆறு-கொடிங்கால் ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர பணிகளை தொடங்க வேண்டும். ஆறு, ஏரி, குளங்கள், கண்மாய்கள், குட்டை ஆகியவற்றில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கடலுக்கு சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் கதவணைகள், தடுப்பணைகள் மூலம் தண்ணீரை சேமிக்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

இதில் மாநில தலைவர் சின்னதுரை தலைமையில் 10 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *