Spread the love

சிவகங்கை ஆகஸ்ட், 4

காளையார்கோவில், 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல நலத்திட்டங்களை செயல்படுத்தியும், பல்வேறு நவீன உதவி உபகரணங்களையும் வழங்கி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் மூலமும், தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடனும் அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள், அலிம்கோ நிறுவனத்தினர் பங்களிப்புடன் 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேவைகளை நிறைவேற்றுவதற்கென அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், காளையார்கோவில் வட்டாட்சியர் உமாமகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *