திருவள்ளூர் செப், 15
பனை மரங்களை பாதுகாக்கும் வகையிலும் பனை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பனை விதை வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பனை தொழில் மற்றும் பனை உற்பத்தி குறித்த விழிப்புணர்வுகளை மாவட்ட அளவில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதன்முதலாக பனை விதை வங்கி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார். இந்த ஒரு ஆண்டில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சம் பனை விதைகளை விதைக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.