ஹரியானா செப், 30
ஹரியானா தேர்தலில் சுயேட்சைக்காக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர் எட்டு பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 5-ம் தேதி அங்கு 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்காததால் முன்னால் அமைச்சர் ரஞ்சித் சவுதாலா உட்பட எட்டு பேர் தனித்துப் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இதனால் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்வதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.