ஹங்கேரி செப், 26
ஹங்கேரியில் நடைபெற்ற 45 வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்த இந்திய அணிக்கு 3.2 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் தலா 25 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.