Spread the love

சிவகாசி ஏப்ரல், 28

சிவகாசி புதுதெருவை சேர்ந்தவர் மரியசந்தனம் (24). இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நாரணாபுரம் போஸ் காலனியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் மரியசந்தனத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் கத்தியுடன் நின்று கொண்டிருந்த ராஜ்குமாரை மடக்கி பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் துறையினர் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *