மதுரை ஜன, 28
மதுரையை எம்.கே. புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர், நேற்று மாலை வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த நபர்கள் திருமுருகனை குறி வைத்து சாரமாரியாக வெட்டினர். இதில் நிலை குழைந்து விழுந்த திருமுருகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.