விருதுநகர் ஆகஸ்ட், 24
இலங்கை தமிழர்கள் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட செவலூர் கிராமத்தில் இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 70 கான்கிரீட் வீடுகள் கட்டி தர தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் தொடக்க விழா செவலூரில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் சட்ட மன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இலங்கை தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இதில் சிவகாசி துணை ஆட்சியர் பிரிதிவிராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் திலகவதி, உதவி இயக்குனர் உமாசங்கர், சிவகாசி வட்டாட்சியர் லோகநாதன், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனி தாசில்தார் கார்த்திகேயினி, ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி, திருத்தங்கல் இளைஞரணி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்