சென்னை அக், 13
கோயில் விளைநிலங்களுக்கு குத்தகை நெல் நிலுவையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், குத்தகை நெல்லை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதை காரணம் காட்டி அந்த நிலங்களை பறிக்கும் செயலில் அறநிலையத்துறை ஈடுபட்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து கோயில் நில குத்தகை உழவர்களை அரசு காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.