புதுடெல்லி அக், 11
நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்தி அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த முடிவால் பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஓட்டுநர்களின் கவனம் சிதறும் என எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.