சென்னை ஆக, 8
மது விற்பனை நேரம் குறைப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை சற்று முன் உத்தரவிட்டுள்ளது. மேலும் மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரச அமல்படுத்த வேண்டும் என்றும், அரசின் அடையாள அட்டை வைத்துள்ளோர்க்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.