இலங்கை ஜூலை, 23
உள்நாட்டு சில்லறை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்தார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கையில் டாலர், யூரோ மற்றும் யென் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது போல் இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை தீவிரமாக பரிசளித்து வருவதாக கூறினார்.