இமாச்சலப் பிரதேசம் மே, 21
இமாச்சல பிரதேசத்தில் அரசு அலுவலகம் கட்டுவதற்காக 20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த விவசாயின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சிறிய அறையில் செயல்பட்டு வந்த அலுவலகத்தை விரிவாக்குவதற்காக நிலத்தை வழங்கியுள்ளார் அவர். இங்கு அரசு அலுவலகம் வந்தால் சுமார் 4000 பேர் பயனடைவார்கள் என்பதால் இதை செய்துள்ளார். பொது நலத்துடன் செயல்பட்ட அந்த விவசாயி பலரும் பாராட்டி வருகின்றனர்.