சென்னை ஏப்ரல், 3
இன்று சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் காணொளி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து வீரமணி, வைகோ, தொல் திருமாவளவன் வேல் முருகன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.