Spread the love

தர்மபுரி டிச, 6

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.

மேலும் மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *