ஈரோடு டிச, 2
மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, உட்பட துறைசார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.