விருதுநகர் நவ, 20
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவகுருநாதன், வட்டார தலைவர் பாலமுருகன் மற்றும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.