Month: September 2022

பப்பிரெட்டியூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.

தர்மபுரி செப், 12 தர்மபுரி அருகே பப்பிரெட்டியூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. கால்நடை உதவி மருத்துவர்கள் வாசுதேவி, ஞானசேகரன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆடுகளுக்கு தடுப்பூசி மற்றும்…

மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம் வெளியீடு!

சென்னை செப், 12 முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கைக் கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்டம்பர் 15 ம் தேதி விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வெளியிடவுள்ளார். தனது ஆட்சியின் இலக்கணமாக ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து…

கண்டமங்கலம் ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் செப், 12 விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் இளங்காடு ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் தனிநபர் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது…

அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறையினர் சோதனை.

விருதுநகர் செப், 12 நுகர்பொருள் வாணிபக்கழக அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். காவல் துறையினர் சோதனை தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் தலைமை இயக்குனர் ஆபாஷ் குமார் தமிழக முழுவதும்…

விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்க கோரிக்கை

திருப்பூர் செப், 12 போடிப்பட்டி உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் பிரபலமான தனியார் பள்ளிகள் உள்ளது.மேலும் இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான டியூசன் சென்டர்களும் அமைந்துள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாகனங்கள் இந்த…

இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை.

திருப்பத்தூர் செப், 12 மாடப்பள்ளி ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அகரம், தாதவள்ளி, சமுத்திரம், கிருஷ்ணாபுரம், கோனேரிக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள்,…

பாலருவி விரைவு ரயில் தடம் புரண்டது. அதிகாரிகள் விசாரணை

நெல்லை செப், 12 கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு தினமும் பாலருவி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட ரெயில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. மேலும்…

தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணி.

தஞ்சாவூர் செப், 12 பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. காலையிலிருந்து ரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த…

இரட்டை கோபுர தாக்குதல் தினம் அனுசரிப்பு. அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

வாஷிங்டன் செப், 12 அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்தனர். மேலும், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலும் கொடூர தாக்குதல்…

துவாரகா சங்கராச்சாரியார் மரணம். பிரதமர் மோடி இரங்கல்.

போபால் செப், 12 மத்தியபிரதேச மாநிலம் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி காலமானார். அவருக்கு வயது 98. நரசிங்பூர் மாவட்டம் ஜோதேஷ்வர் தாமில் உள்ள அவரது ஆசிரமத்தில் அவர் மறைந்தார். உயிர் பிரிந்தபோது அவரைச் சுற்றி சீடர்கள் நின்றிருந்தனர்.…