Category: மாவட்ட செய்திகள்

கடலில் திசைமாறி சென்ற மீனவர்கள் ஊர் திரும்பிய நிகழ்வு

மயிலாடுதுறை அக், 2 பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 25 ம் தேதி பூம்புகாரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார், அஞ்சப்பன், தமிழ்ச்செல்வன், நிலவரசன், கண்ணன், மாசிலாமணி, பிரகாஷ் உள்பட 14 மீனவர்கள்…

மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை அக், 2 புதுச்சேரியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து அங்கு போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மதுரை புதூர் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா சார்பில் ரத்ததான முகாம்

கிருஷ்ணகிரி அக், 2 கெலமங்கலத்தில் பாரதியஜனதா கட்சி சார்பில், அங்குள்ள சமுதாய கூடத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதற்கு இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி…

வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு

கரூர் அக், 2 உப்பிடமங்கலத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், கரூர்…

சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை.பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்பு.

கன்னியாகுமரி அக், 2 தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் என போற்றப்பட்ட நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் சிவாஜி கணேசனின்…

உளுந்தூர்பேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கற்சிலைகள்

கள்ளக்குறிச்சி அக், 2 விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கண்டெடுத்தனர். இதுபற்றி செங்குட்டுவன் கூறுகையில், செம்மணங்கூர் கிராமத்தில் பூரணி பொற்கலை…

வேடசந்தூர் அருகே ஆயுதபூஜைக்கு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் அக், 2 ஆயுதபூஜை வருகிற 4 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வீடுகளுக்கு வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.இந்த ஆயுதபூஜைக்கு வழிபாட்டின்போது வாழைப்பழம், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட படையலுடன் பொரி…

கள்ளக்குறிச்சியில் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்.

கடலூர் அக், 2 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர்,…

குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வலியுத்தியதால் ஆம்னி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்.

நெல்லை அக், 2 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 3 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.கோயம்புத்தூர் மாவட்டம் காரணம்பேட்டையில் முத்துகிருஷ்ணன் பழைய இரும்பு கடை நடத்தி…

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் அக், 2 கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரூ.3,750 போனஸ் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை…