கோயம்புத்தூர் அக், 2
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரூ.3,750 போனஸ் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர், மேயர் ஆகியோரின் முயற்சியால் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் ரூ.3,750 போனஸ் தொகை வழங்கப்படும். இதன் மூலம் 4750 பேர் பயன் அடைவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளார்.