Author: Mansoor_vbns

பாலியல் வன்முறைக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி. மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

கடலூர் செப், 26 கடலூரில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16-வது மாநில மாநாட்டையொட்டி பாலியல் வன்முறை, போதை பழக்கத்திற்கு எதிராக கடலூரில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கடலூர்…

டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவரின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் அஞ்சலி.

சென்னை செப், 26 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலக்குறைவால் காலமான அவரது தாயார் பிரேமா சீனிவாசன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும்…

கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்.

வேலூர் செப், 26 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தமிழக கல்வி கொள்கை குறித்து தமிழகத்தில 4 மண்டலங்களாக பிரித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய…

கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை.

விழுப்புரம் செப், 26 எம்.ஜி.சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் துணிகள் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மோகன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.…

முதல் அமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்.

சென்னை செப், 26 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து…

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு கொரோனா பாதிப்பு.

ஸ்பெயின் செப், 26 ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை அவரே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் 60 வயதை…

ஏழாயிரம்பண்ணையில் 23 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்.

விருதுநகர் செப், 26 மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் காவல் துறையினர் ஏழாயிரம்பண்ணை எல்லம்மாள் காம்பவுண்ட் தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா…

தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு.

அரியலூர் செப், 26 ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அரியலூர் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பிரபாகரன், ராஜ்குமார்…

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை நிலவரம்.

நாமக்கல் செப், 26 ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் இதுவரை ரூ.5 கோடியே 18 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மல்பெரி சாகுபடி நாமக்கல் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சி…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்.

நாகப்பட்டினம் செப், 26 வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி…