Spread the love

தர்மபுரி நவ, 8

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரதி வரவேற்றார்.நிர்வாகிகள் பரமசிவம்,மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் மணி, அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக வழங்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஈட்டிய விடுப்பு பலன் வழங்க வேண்டும். அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *