Spread the love

புதுக்கோட்டை நவ, 6

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டேவிதார்சாலை முக்கத்தில் செல்வமணி என்பவர் டீ கடை நடத்தி வருகின்றார். இவர் நேற்று கடையில் வடை போடுவதற்காக அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது திடீரென நெருப்பு பிடித்து சிலிண்டர் எரியத்தொடங்கியுள்ளது.இந்நிலையில் சிலின்டர் எரிகிறது என்றதும் அருகில் இருந்தவர்கள் ஆங்காங்கே சிதறி ஓடியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர், விரைந்து வந்து சாக்கை நனைத்து சிலின்டர் மீது மூடி சிலிண்டரை லாவகமாக வெளியே இழுத்துவந்து அருகில் இருந்த சாக்கடையில் மூழ்கடித்தார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை தடுத்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரை அனைவரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *