கள்ளக்குறிச்சி நவ, 6
இந்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், மின் விதிகள் மற்றும் மேலாண்மைக் கழிவு விதிகளின்கீழ், அங்கீகரி க்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுபு துப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.
மேலும், நடுவண்மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள், மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீக ரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எனவே, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்கழிவுகளைஅறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனிதஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இச்செயல் தொடர்ந்து நடைபெற்றால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 இலட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.
மேலும்,பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின் கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்கத்தைத் தவிர்த்து மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்று செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.