Spread the love

நெல்லை நவ, 2

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாளையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில் 2வது முறையாக திமுக. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் தெரிவிப்பது, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வருகிற 27 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி கட்சிக்கொடி ஏற்றுவது, இந்தி திணிப்பிற்க்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பாசறைக்கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறுவது, வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி திமுக அரசின் சாதனைகளை விளக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிராபகரன், மாவட்ட துணைச்செயலாளர் தமயந்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், அம்பை சேர்மன் பிரபாகர பாண்டியன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *