Spread the love

சிவகங்கை நவ, 1

திருப்புவனம் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மன்றப் பொருள் தீர்மானங்களை மேலாளர் கார்த்திகா வாசித்தார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மின்சாரம், வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆணையாளர் அங்கயற்கண்ணி உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *