கரூர் அக், 31
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் குருதி கொடையாளர் குழுமம் சார்பில் தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 18 வயது முதல் 25 வயது வரை ஒரு பிரிவாகவும், 25 வயது முதல் 40 வயது வரை ஒரு பிரிவாகவும் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 350 பேர் பங்கேற்றனர்.