அரியலூர் அக், 27
அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து தீபாவளி விடுமுறைக்கு பிறகு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக நேற்று ஏராளமான பயணிகள் அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். பல்லவன், வைகை அதிவிரைவு ரெயிலில் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். இதன்காரணமாக அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.