சிவகங்கை அக், 27
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம் உள்பட 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும். பாலம் சேதமடைந்து உள்ளது தொடா்பாக, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, நீர்வளத்துறை செயற்பொறியாளா் பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.