Spread the love

திருவண்ணாமலை அக், 27

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ‌தலைமை தாங்குகிறார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு துறை, வருவாய்த்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபர் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தும் பயன்பெறலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *