Spread the love

நாமக்கல் அக், 26

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.இங்கு தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டை விட அதிக அளவில் கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் 2,500 டன் கறிக்கோழி விற்பனையாகி உள்ளது என கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *