கோயம்புத்தூர் அக், 19
கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் நான்கு அம்ச கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக சத்துணவு ஊழியர்கள் தமிழகத்தில் முதல் முதலாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.
இதில் சத்துணவு ஊழியர்கள் அரசு பணியாளராக கருதி கால முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் ரூ.7850 வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளருக்கு மூன்று லட்சமும் வழங்க வேண்டும், முதல்வரின் காலை சிற்றுண்டி தயாரிப்பை சத்துணவு ஊழியருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
இதனை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி ஒன்றிய பொறுப்பாளர் சிவகாமி ஒன்றிய தலைவர் வசந்தி ஆகியோர் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.