புதுடெல்லி அக், 17
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த ரமணா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றார். அவர் அடுத்த மாதம் 8 ம்தேதி பணி நிறைவு செய்கிறார்.
இதனிடையே, அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி லலித் பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்யை நியமிக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.50வது தலைமை நீதிபதியாக நீதிபதி சந்திரசூட் அடுத்த மாதம் பதவியேற்கவுள்ளார்.