Spread the love

பெங்களூரு அக், 15

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வந்த போதிலும் தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று சற்று பரவி வருகிறது. மேலும் நேற்று 10 ஆயிரத்து 136 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 116 பேருக்கும், மைசூருவில் 25 பேருக்கும், குடகில் 7 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தட்சிண கன்னடாவில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 133 பேர் குணம் அடைந்தனர். 2 ஆயிரத்து 950 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.82 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *