மயிலாடுதுறை அக், 15
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைகிறதா, அதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் முருகண்ணன், உதவி ஆணையர் நரேந்திரன், உதவி ஆட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கவிதாபிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி இயக்குனர் மஞ்சுளா மற்றும் வட்டாட்சியர்கள் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.