திருவாரூர் அக், 15
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் ஆய்வாளர்கள், அருண் பிரசாத், சித்ரா மற்றும் காவல் துறையினர் திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை நீண்ட நேரம் சரிபார்த்தனர். மேலும் அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் முழுமையாக சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து கோட்ட பொறியாளர் இளம்வழுதியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.