Spread the love

சென்னை அக், 15

இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மாணவர் அணி செயலாளர் எழிலரசன் முன்னிலை வகிக்கிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக. இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *