Spread the love

கடலூர் அக், 14

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதளத்தில் (national scholarships portal-NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் எனவே தகுதியான மாணவ- மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு நாளை வரை, மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http.www.minorityaffairs.gov.in/என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *